கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு சம்பள உயர்வு: ஆண் வீரர்களுக்கு இணையான சம்பளம்!

வியாழன், 27 அக்டோபர் 2022 (19:21 IST)
ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான சம்பளத்தை பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் வழங்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக எழுப்பப்பட்டு இருந்தது
 
இந்த நிலையில் இந்த கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான சம்பளம் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் டி20 போட்டி 3 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்