206 என்ற மிகப்பெரிய இலக்கு: 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறும் வங்கதேசம்!

வியாழன், 27 அக்டோபர் 2022 (11:24 IST)
206 என்ற மிகப்பெரிய இலக்கு: 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறும் வங்கதேசம்@
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது.  ரிலே ரோஸ்ஸோ அபாரமாக விளையாடி 109 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து 206 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் வங்கதேச அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. தென்ஆப்பிரிக்க அணியின் நார்ட்ஜே மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்