மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்!

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (17:24 IST)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் லீக் போட்டிகள் தற்போது முடிவடைந்து அரையிறுதி போட்டிகள் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது
 
இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வீழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 4 நாடுகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகளுக்கிடையே அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது 
 
இந்த இரண்டு அரை இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பதும் இறுதிப் போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்