டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு!

புதன், 29 செப்டம்பர் 2021 (19:18 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43வது போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியின் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததார்.
 
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்றால் 14 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அடுத்த சுற்றை உறுதி செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேநேரத்தில் ராஜஸ்தான் அணி தற்போது 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்