ராஜஸ்தான் அணியில் இரு மேற்கிந்திய வீரர்கள்!

புதன், 1 செப்டம்பர் 2021 (11:09 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒஷேன் தாமஸ் மற்றும் எவின் லெவிஸ் ஆகியோர் இணைய உள்ளனர்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரரான ஜோஸ் பட்லர் தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் விலகியுள்ளார். அதே போல அந்த அணியின் பென் ஸ்டோக்ஸும் தற்காலிகமாக கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவர்களுக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஒஷேன் தாமஸ் மற்றும் எவின் லெவிஸ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்