கொல்கத்தா மைதானத்தில் மழை: தாமதமாகும் டாஸ்

புதன், 25 மே 2022 (19:03 IST)
கொல்கத்தா மைதானத்தில் மழை: தாமதமாகும் டாஸ்
ஐபிஎல் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டியாக லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டியின் டாஸ் சரியாக ஏழு மணிக்கு போட வேண்டிய நிலையில் திடீரென மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மைதானத்தில் கவர் வைத்து மூட பட்டுள்ளதாகவும் தெரிகிறது 
 
இன்றைய எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் வெள்ளியன்று நடைபெறும் பிளே ஆப் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பதும் அந்த இறுதிப் போட்டியில் வெல்லும் அணி இந்த ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்