இந்திய அணி இல்லையென்றால் வேறு அணி இல்லையா; ஸ்ரீசாந்த் சர்ச்சை பேச்சு...

வெள்ளி, 20 அக்டோபர் 2017 (20:33 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  


 
 
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேட்ச் பிச்சில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது.
 
சமீபத்தில் உயர் நீதிமன்றமும் ஸ்ரீசாந்த மீதான தடை பிசிசிஐ முடிவு இதில் உயர்நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறியது. இந்நிலையில், ஸ்ரீசாந்த சர்ச்சையை கிளப்பும் விதத்தில் பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, இந்திய கிரிக்கெட்டில் விளையாட கூடாது என்றால் வெளிநாட்டு அணிகளில் விளையாடுவேன். பிசிசிஐ ஒரு தனியார் நிறுவனம். நான் வேறு அணியில் விளையாடுவதை அதனால் தடுக்க முடியாது. ஐசிசி என் மீது தடை விதிக்கவில்லை என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்