இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

செவ்வாய், 16 மார்ச் 2021 (13:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ள நிலையில் இன்றைய மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி எது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் வேகம் இப்போது அதிகமாகியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்