நிதானம் காட்டும் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள்… விக்கெட் கிடைக்காமல் இந்தியா திண்டாட்டம்!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (14:44 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வலுவான நிலையை நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருக்கிறது.

ஜோகன்னஸ்பார்க் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் ராகுல் 50 ரன்களும் அஸ்வின் 46 ரன்கள் எடுத்து உள்ளனர். இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நேற்று ஒரு விக்கெட் இழந்தது.

அதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் மேற்கொண்டு விக்கெட் விழாமல் தொடர்ந்து ஆடிவருகின்றனர். சற்று முன்னர் வரை தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்