பெங்களூரு அணியின் கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே வீரர்

சனி, 12 மார்ச் 2022 (17:55 IST)
பெங்களூர் அணியின் கேப்டனாக முன்னால் சிஎஸ்கே வீரர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராத் கோலி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் 
 
இதனை அடுத்து பெங்களூர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்படுபவர் யார் என்று கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது 
 
இந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டூபிளஸ்சிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி ரன்களை குவித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இதனை அடுத்து டூபிளஸ்சிஸ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்