நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா,

சனி, 11 ஜூன் 2022 (17:28 IST)
கடந்த மாதம் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், முன்னணி வீரரும் சாம்பியனுமான கார்ல்சனை வீழ்த்தி இரண்டாவது இடம் பிடித்த பிரக்ஞானந்தா,  நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக் ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளர்.

இந்த தொடரில் மொத்தம் 9 சுற்றுகள்  நடைபெற்றது. இதில், பிரக் ஞானதா 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 3 போட்டிகளில் டிரா என மொத்தம் 7.5 புள்ளிகள் பெற்று அவர் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

நேற்று நடந்த கடைசிச் சுற்றில் இந்தியாவின் பிரனீத்தை எதிரிகொண்ட பிரக்ஞானந்தா 49 வது நகர்வில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்