கங்குலிக்கு ராஜ்யசபா எம்பி பதவியா? ஆச்சரிய தகவல்

திங்கள், 9 மே 2022 (18:35 IST)
சவுரவ் கங்குலிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ராஜேஷ் பதவி அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
சமீபத்தில் கொல்கத்தா சென்ற அமைச்சர் அமித்ஷா, கங்குலி வீட்டுக்கு சென்று இரவு உணவு அருந்தியதாகவும், அப்போது கங்குலிக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது
 
ஒருவேளை ராஜ்யசபா பதவியை கங்குலி ஏற்காவிட்டால் அவரது மனைவிக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்