கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை.. ஹெட்மயர் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி..!

Siva

ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (08:00 IST)
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹெட்மயர் அதிரடியாக இரண்டு சிக்ஸர் அடித்து 19.5 ஓவரில் திரில் வெற்றி பெற வைத்தார்

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 148 ரன்கள் என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 10 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது.


ஆனால் முதல் மூன்று பந்துகளில் ரன் ஏதும் வராததால் போட்டி பஞ்சாப் பக்கம் திரும்பியதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஹெட்மயர் இரண்டு சிக்ஸர்களை அடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி நேற்றைய தோல்வி மூலம் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து வெறும் 4 புள்ளிகளில் 8வது இடத்திலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளும் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளும் மோத உள்ளன

ALSO READ: திமுக கவுன்சிலர்களே ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவா? அப்செட்டில் துரைமுருகன்..!
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்