ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தென் கொரிய வீராங்கனை கா யூன் கிம்முடன் மோதினார்.
இந்த போட்டியில் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி பெற்ற நிலையில் அதன்பின், பி.வி. சிந்துவை சுதாரிக்க விடாமல் தென்கொரிய வீராங்கனை அடுத்தடுத்து செட்டையும் வென்று வெற்றி பெற்றார். இதனால், முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து, பி.வி. சிந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள, உலக அளவில் பதினாறாம் நிலை பெற்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, 21ஆம் இடத்தில் உள்ள கொரிய வீராங்கனைக்கு எதிராக ஆட்டம் 61 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இந்த ஆட்டத்தில் 21-19, 13-21, 13-21 என்ற செட்களில் பிவி சிந்து தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.