தொடர்ச்சியாக 3வது தோல்வி: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி

ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (23:13 IST)
ஐபிஎல் தொடரின் 11வது போட்டி இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது 
 
பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது என்பதும், அந்த அணியின் அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 60 ரன்களும், ஷிகர் தவான் 33 ரன்களும் அடித்தார்கள். சென்னையை பொருத்தவரை கிறிஸ் ஜோர்டன் மற்றும் பிரெட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் 
 
இந்த நிலையில் 181 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
 
தொடர்ச்சியாக 3வது தோல்வி காரணமாக சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்