முதல் ஓவரிலேயே பஞ்சாப் கேப்டனை தூக்கிய உமேஷ் யாதவ்!

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:55 IST)
முதல் ஓவரிலேயே பஞ்சாப் கேப்டனை தூக்கிய உமேஷ் யாதவ்!
ஐபிஎல் தொடரில் இன்றைய 8வது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன 
 
இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து பஞ்சாப் தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
இன்றைய போட்டியின் முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் உமேஷ் யாதவின் அடுத்த ஓவரில் பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அக்கப்பட்டது. இந்த நிலையில்  அடுத்து தற்போது பஞ்சாப் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்