சென்னையில் நடைபெறும் கடைசி 2 போட்டிகள்: இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட்..!

வியாழன், 18 மே 2023 (07:42 IST)
கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேரில் வழங்கப்பட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து டிக்கெட் விலை பெற்று வந்தனர். ஒரு சிலர் அதிக விலைக்கு டிக்கெட்டுக்களை பிளாக்கில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் சிஎஸ்கே நிர்வாகம் அடுத்து வரும் பிளே ஆப்  போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில் பிளே ஆப்  போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று தொடங்க இருப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று பகல் 12 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 23 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பிளே ஆப் சுற்றுக்கான போட்டி டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்