கோலிக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன…. பார்த்திவ் படேல் எச்சரிக்கை!

செவ்வாய், 15 ஜூன் 2021 (15:24 IST)
இங்கிலாந்தில் நியுசிலாந்து அணியுடன் விளையாடும் போது கோலிக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள பார்த்தீவ் படேல் ‘இங்கிலாந்தில் கோலிக்கு நிறைய சவால்கள் காத்திருக்கும். அவர் 2018 ஆம் ஆண்டு நிதானமாக விளையாடியதை போல சில சதங்கள் அடிக்கவேண்டும். ஆனால் நியுசிலாந்து அணி ஒரே மாதிரியாக பந்துவீசும் அணி இல்லை என்பதுதான் அவருக்கு சவாலாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்