ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டி.! லீக் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி..!!

Senthil Velan

ஞாயிறு, 28 ஜூலை 2024 (14:18 IST)
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
 
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை கோலகாலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்று போட்டியில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து,   மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா உடன் மோதினார். இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

ALSO READ: மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு.! 12000 கன அடி நீர் திறக்க முதல்வர் உத்தரவு..!!
 
ஜூலை 31 ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து, எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்