இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், 14வது ஓவரை வீச வந்த இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் நிதீஷ் குமார் ரெட்டி, அந்த ஒரே ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களான சாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
13.3 ஓவரில் பென் டக்கெட்டை வீழ்த்திய நிதீஷ் குமார் ரெட்டி, 13.6 ஓவரில் சாக் கிராவ்லி விக்கெட்டையும் வீழ்த்தினார். இரண்டு விக்கெட்டுகளுமே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தால் கேட்ச் பிடிக்கப்பட்டு விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஆலி போப் 12 ரன்களுடனும், ஜோ ரூட் 24 ரன்களுடனும் விளையாடி கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி 25 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.