டாஸ் வென்ற நியூசிலாந்து எடுத்த அதிரடி முடிவு! இரு அணியிலும் மாற்றம்!

செவ்வாய், 24 ஜனவரி 2023 (13:06 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் நியூசிலாந்து கேப்டன் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா ஏற்கனவே இந்த தொடரின் இரண்டு போட்டிகளை வென்று தொடரையும் வென்று உள்ளதால் இந்த போட்டியையும் வென்று முழுமையான வெற்றி பெறும் முயற்சிக்கும். அதே நேரத்தில் நியூசிலாந்து அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியடைய தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நியூசிலாந்து அணிகள் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஷில்பி என்பவருக்கு பதிலாக ஜேக்கப் டஃப்பி என்பவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் இந்திய அணியில் ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர்களுக்கு பதிலாக உம்ரான் மாலிக் மற்றும் சாஹல் அணியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்