புதிய கேப்டனின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கும் கோலி… கவனத்தை ஈர்த்த புகைப்படம்!

செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:04 IST)
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் கோலி ஒரு வீரராக ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளார்.

குறுகிய இடைவெளியில் இந்திய அணியின் டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள ஒருநாள் தொடரில் சில ஆண்டுகளுக்குப் பிறகு கோலி ஒரு வீரராக விளையாட உள்ளார்.

இந்நிலையில் தொடருக்கு முன்பாக தற்காலிக கேப்டன் கே எல் ராகுல் அணி வீரர்களை ஒருங்கிணைத்து பேசக்கூடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் கோலி அணியின் ஒரு வீரராக ராகுலின் பேச்சைக் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்