ஒரு மாதத்திற்கு முன்பே செல்லும் ஐபிஎல் அணிகள்! சிறப்பு ஏற்பாடுகள்

வெள்ளி, 24 ஜூலை 2020 (06:46 IST)
கடந்த மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடர் போட்டியின் அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்தன.
 
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஒரு மாதத்திற்கு முன்னரே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பரில் போட்டி தொடங்கவுள்ளதால் ஆகஸ்ட் மத்தியில் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளன
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிக்காக 3 மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவை துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயத் மைதானம் மற்றும்  சார்ஜாவில் மைதானம் ஆகியவை ஆகும்
 
ஒரு மாதத்திற்கு முன்னரே ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் ஐபிஎல் அணிகள் இந்த மூன்று மைதாங்களிலும் பயிற்சி பெறும் என தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்