ஐபிஎல் 2022-; பஞ்சாபை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (23:45 IST)
15 வது ஐபிஎல் திருவிழா இந்த  ஆண்டு ஆண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக  குஜராத் அணி அணி   விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா  பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே மயங்க் அகர்வால்  தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதில், தவான் 35 ரன்களும், லிவிங்ஸ்டன் 64 ரன்களும், ஷர்மா 23 ரன்களும், கான் 15 ரன்களும்  , சாஹர் 22 ரன்களும், சிங் 10 ரன்களும்  அடித்துனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்து, குஜராத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து  விளையாடிய குஜராத் அணியினர், 20 ஓவர்களின் 4 விக்கெட் இழப்பிற்கு  190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

இதில், சுப்பான்  கில் 90 ரன்களும், சாய் சுதர்சன் 35 ரன்களும், ஹர்த்திக் பாண்ட்யா 27 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். எனவே குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில், ரபாடா  2 விக்கெட்டுகளும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்