குல்தீப் யாதவ், ஜடேஜா அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்தது மே.இ.தீவுகள்..!

Siva

ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (12:52 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் தடுமாறி வருகிறது.
 
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
 
இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, சற்று முன் 80 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்துள்ளது.
 
இந்திய தரப்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசினர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முகமது சிராஜ், பும்ரா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
 
தற்போதுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்னும் 270 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்