'டை'யில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகள் அபார பேட்டிங்

புதன், 24 அக்டோபர் 2018 (22:31 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டி 'டை'யில் முடிந்தது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 'டை' என்பது மிகவும் அபூர்வமாக நடக்கும் நிகழ்வாகும். அது இன்றைய போட்டியில் அதுவும் விராத் கோஹ்லி அதிவேக 10 ஆயிரம் ரன்கள் எடுத்து உலக சாதனை செய்த போட்டியில் நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 321/6 50 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 157
ராயுடு: 73

மே.இ.தீவுகள் அணி: 321/7  50 ஓவர்கள்

ஹோப்: 123
ஹெட்மியர்: 94

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

யாதவ் வீசிய கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க வேண்டியிருந்த நிலையில் முதல் பந்தில் ஒரு ரன்னும், இரண்டாவது பந்தில் 4 ரன்களும் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்களும் எடுத்த நிலையில் நான்காவது பந்தில் விக்கெட் விழுந்தது. இதனால் இரண்டு பந்துகளில் ஏழு ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் 5வது பந்தில் 2 ரன்களும், 6வது பந்தில் 4 ரன்களும் எடுத்ததால் போட்டி 'டை'யில் முடிந்தது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்