நாளை இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி: கே.எல்.ராகுலுக்கு வெற்றி கிடைக்குமா?

புதன், 8 ஜூன் 2022 (07:30 IST)
நாளை இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி: கே.எல்.ராகுலுக்கு வெற்றி கிடைக்குமா?
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை டெல்லியில் நடைபெற உள்ளது
 
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
இந்திய அணியை பொறுத்தவரை கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ருத்ராஜ், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக்,  ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார் போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர்
 
அதேபோல் தென்ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரபடா  உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர்
 
 நாளை நடைபெறும் முதல் டி20 போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்