ஹர்திக் பாண்ட்யா இன்னும் பந்துவீச்சுக்கு தயாராகவில்லை… ரோஹித் ஷர்மா தகவல்!

வியாழன், 21 அக்டோபர் 2021 (11:09 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயத்துக்கு பிறகு பந்துவீசுவதில்லை.

சில மாதங்களாக முதுகுத்தண்டு காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, சிகிச்சையில் தேறி அணியில் இடம்பிடித்தார். ஆனால் இப்போது வரை அவர் பந்துவீசுவதில்லை. பேட்டிங் மட்டுமே செய்கிறார். இதனால் ஆறாவது பவுலராக அவரை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் துணைக்கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ரோஹித் ஷர்மா ‘ஹர்திக் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவர் இன்னும் பந்துவீசுவதற்கு தயாராகவில்லை’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்