இந்நிலையில் கடைசி நாளில் புதுப்பந்து எடுப்பதற்காக நேரம் வந்தபோதும் ஏன் அதை செய்யாமல் பழைய பந்திலேயே வீசினீர்கள் என்ற கேள்விக்கு சிராஜ் அளித்துள்ள பதில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் “பழைய பந்தால் என்னால் என்ன செய்ய முடியும் என்று சிலருக்குக் காட்ட விரும்பினேன்” எனப் பதிலளித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் சிராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது அவரால் பழைய பந்தில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என அப்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.