ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி; கால் இறுதி வாய்ப்பை இழந்த பிரக்ஞானந்தா!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (08:36 IST)
உலக செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் கால் இறுதி செல்லும் வாய்ப்பை பிரக்ஞானந்தா இழந்துள்ளார்.

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு செஸ் வீரர்கள் இதில் போட்டியிட்டு வருகின்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் கால் இறுதிக்கு முன்னேறுவார்கள்.

லீக் ஆட்டங்களின் முடிவில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை தமிழக கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா வீழ்த்தியது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தரவரிசையில் 11வது இடத்தில் இருப்பதால் கால் இறுதிக்கு செல்லும் வாய்ப்பை பிரக்ஞானந்தா இழந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்