தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிசிசிசி தலைவர் கங்குலி

வியாழன், 16 ஜூலை 2020 (15:36 IST)
இந்திய கிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசியின் தலைவருமான கங்குலி தனது சகோதருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ள கங்குலியின்  சகோதரர் ஸ்னேஹாசிஸ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கல்கத்தாவில் உள்ள பல் வியூ என்ற  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது சகோதரரான பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்