சையத் அலி முஷ்டாக் கோப்பையில் தமிழக அணிக்கு தலைமையேற்கும் தினேஷ் கார்த்திக் !

வியாழன், 24 டிசம்பர் 2020 (11:26 IST)
இந்திய மாநிலங்களுக்கு இடையே நடக்கும் சையத் அலி முஷ்டாக் கோப்பை தொடர் விரைவில் தொடங்க உள்ளது.

சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியின் விவரம்

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), விஜய் சங்கர்(துணைக் கேப்டன்), பி. அபராஜித், பி.இந்திரஜித், அஸ்வின் கிறிஸ்ட், எம். முகமது, ஜி.பெரியசாமி, சந்தீப் வாரியர், ஜே.கவுசிக், ஆர்.சோனு யாதவ், எம்.அஸ்வின், எம்.ஷாருக்கான், சி ஹரி நிசாந்த், கே.பி. அருண் கார்த்திக், பிரதோஷ் ராஜன் பால், என். ஜெகதீசன், ஆர். சாய் கிஷோர், எம்.சித்தார்த், எல்.சூர்யபிரகாஷ், ஆர்எஸ் ஜெகநாத் ஸ்ரீனிவாஸ்.

இதில் அஸ்வினும் நடராஜனும் ஆஸ்திரேலியாவில் இருப்பதாலும், முரளி விஜய் காயத்தால் விலகியதாலும் அவர்கள் மூவரும் இடம்பெறவில்லை. தமிழக அணி பங்கேற்கும் போட்டி அனைத்தும் கொல்கத்தாவில் ஜனவரி 10-ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்