ரிக்கி பாயிண்டிங்கை விட தோனி கேப்டன்ஷிப் சிறந்தது: அப்ரிடி

வியாழன், 30 ஜூலை 2020 (19:39 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி தனக்கு தெரிந்த வரை கேப்டன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கைவிட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறந்தவர் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக இந்திய வீரர்களை பாராட்டுவது இல்லை. ஆனால் தோனி விஷயத்தில் இது அப்படியே உல்டாவாக நடக்கும். அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தோனியை பிடிக்கும் என்பதே இதற்கு காரணம்
 
இந்த நிலையில் சமீபத்தில் சாகித் அப்ரிடி தனது டுவிட்டரில் கேள்வி பதில் குறித்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது உலகிலேயே சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது ’உலகிலேயே சிறந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் தான் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை தோனி தான் சிறந்த கேப்டன் ஏனெனில் அவர்தான் இளம் வீரர்கள் அடங்கிய அணியை வழி நடத்தினார் 
 
ஆனால் ரிக்கி பாயிண்டிங்  சிறந்த, அனுபவமுள்ள வீரர்களை கொண்டே விளையாடினார். எனவே என்னைப் பொருத்த வரை தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார். அப்ரிடியின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்