பூம்ராவை அடித்து ஆடும் ஒரே பேட்ஸ்மேன் இவர்தான்… கம்பீர் கருத்து!

வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:36 IST)
இன்னும் இரு தினங்களில் ஐபிஎல் கேளிக்கைகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் அதுபற்றிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் (இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்) கவுதம் கம்பீர் தனது ஐபிஎல் கருத்துகளை பகிர்ந்து வருகிறார். ஆர்சிபி அணி பற்றி பேசியுள்ள அவர் ‘கோலிக்கு மிகப்பெரிய பலமே டிவில்லியர்ஸும், மேக்ஸ்வெல்லும்தான். பூம்ராவை தொடர்ந்து சரியாக கணித்து ஆடும் ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது டிவில்லியர்ஸ்தான்’ எனக் கூறியுள்ளார்.

இந்த சீசனில் ஆர் சி பி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 7 ல் 5 போட்டிகளை வென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்