விராத் கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நெருங்குகிறது இந்தியா

ஞாயிறு, 26 நவம்பர் 2017 (15:42 IST)
நாக்பூரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்து வருவதால் இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 594 என்ற நிலையில் உள்ளது

கேப்டன் விராத்கோஹ்லி அபாரமாக விளையாடி 213 ரன்கள் எடுத்தார். மேலும் முரளிவிஜய், புஜாரா ஆகியோர்களும் சதமடித்துள்ளனர். அதுமட்டுமின்றி ரோஹித் சர்மாவும் 88 ரன்கள் அடித்து சதத்தை நெருங்கிவிட்டார்.

இந்த நிலையில் 390 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளதாலும் இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருப்பதாலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதி என்றே கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்