2வது டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்

வெள்ளி, 24 நவம்பர் 2017 (11:14 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நாக்பூரில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. 


 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இரண்டாவது இன்னிஸில் இலங்கை அணி தோல்வி பயத்தை கொடுத்தது. இறுதி நாள் போட்டியில் 7 விக்கெட் சாய்த்தது இந்திய அணி. வெற்றியை மிக அருகில் நெறுங்கியது.
 
புவனேஷ்வர் குமார் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி வீரர்கள் தடுமாறினர். இந்நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இதில் ட்ராஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி தற்போது இலங்கை அணி 39 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது.
 
இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் தவான் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இஷாந்த் சர்மா மற்றும் முரளி விஜய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் போட்டி போன்று இலங்கை அணி இந்த போட்டியில் மிரட்டுமா என அனைவரும் ஆவலோடு உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்