2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்காமில் நடந்து வரும் நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். முன்னதாக 5 தங்கம் உள்பட 13 பதக்கங்களை இந்தியா வென்றிருந்த நிலையில் நேற்று மேலும் 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
ஸ்குவாஷ் போட்டியின் ஆண்கள் ஒற்றை பிரிவில் சவுரவ் கோசல் வெண்கல பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 190+ பளு தூக்கும் போட்டியில் குர்தீப் சிங் வெண்கல பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில் தேஜஸ்வின் சங்கர் வெண்கலம் வென்றார்,