டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்: முதல் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்!

வியாழன், 7 ஜனவரி 2021 (07:23 IST)
டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்: முதல் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் 3-வது கிரிக்கெட் போட்டி இன்று சிட்னி நகரில் சற்றுமுன் தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டாஸ் வென்றதை அடுத்து பேட்டிங் செய்ய முடிவு செய்தார்
 
இதனை அடுத்து சற்றுமுன் தொடக்க ஆட்டக்காரர்களாக புகோவ்ஸ்கி மற்றும் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 4-வது ஓவரில் மிக அபாரமாக சிராஜ் வீசிய பந்தை டேவிட் வார்னர் அடிக்க முயன்றபோது புஜாரேவிடம் கேட் கொடுத்து ஆட்டமிழந்தார்.
 
இதனை அடுத்து டேவிட் வார்னரின் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி சற்று முன் வரை 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி வருகின்றனர் 
 
இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் வாய்ப்பு இருப்பதால் இரு அணிகளும் இந்த போட்டியை வெல்வதற்கு தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கி இருப்பது இந்திய அணிக்கு பலமானதாக பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்