14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு குடும்பத்தினரை சந்தித்த ஆஸி வீரர்கள்!

செவ்வாய், 1 ஜூன் 2021 (16:35 IST)
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் ஆஸி வீரர்கள் தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.

இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ஆஸி வீரர்கள் மாலத்தீவுகளில் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து தாய்நாட்டுக்கு தனிவிமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நேரடியாக ஓட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கே அவர்களுக்கு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த நிலையில் இப்போது அவர்கள் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்