ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா? ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (08:45 IST)
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது
 
மகாராஷ்டிராவில் மட்டுமே இந்த ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதாகவும் அம்மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது 
 
மேலும் மைதானங்களில் 40 சதவீத பார்வையாளர்கள் போட்டிகளைப் பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்