சி.எஸ்.கே அணியில் தான் நான் எல்.கே.ஜி முதல் படித்தேன்: அஸ்வின்

சனி, 18 டிசம்பர் 2021 (13:35 IST)
சிஎஸ்கே அணியில் தான் நான் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் என்றும் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப விரும்புகிறேன் என்றும் அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 
 
2022ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளை இணைந்து உள்ளதை அடுத்து மொத்த போட்டியாளர்களுக்கும் ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது டெல்லி அணியில் உள்ள அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
 
இதுகுறித்து அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறியபோது ’சிஎஸ்கே அணி என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அங்குதான் நான் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பின்பு 11 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி வேறு இடத்தில் சென்றாலும் மீண்டும் சொந்த வீட்டுக்கு வர விரும்புகிறேன். ஆனால் அது ஏலத்தின் நிலையை பொறுத்து உள்ளது என்று கூறியுள்ளார் 
 
எனவே சிஎஸ்கே அணிக்கு அவர் திரும்ப உள்ளதை மனம்விட்டு கூறியுள்ள நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை ஏலம் எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்