தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், தான் முடிவெடுப்பதற்கு முன்பே, அப்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் ஒருமுறை யோசிக்குமாறு கூறியதாகவும், ஆனால் இது ஒரு தனிநபர் முடிவு என்பதால் தான் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசிய அஸ்வின், இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவர்களின் அனுபவத்தை விலைக்கு வாங்க முடியாது என்றார்.