பல வருடங்களுக்கு பின் சென்னையில் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி!

வெள்ளி, 1 ஜூலை 2022 (11:59 IST)
பல வருடங்களுக்குப் பின்னர் சென்னையில் மீண்டும் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சென்னையில் இம்மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்கும் நிலையில் தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீண்ட காலத்திற்கு பிறகு சென்னையில் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 12 முதல் 18ம் தேதி வரை நடக்கும் என்றும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒற்றையர் பிரிவில் பட்டம் பெறும் வீராங்கனைகளுக்கு 26 லட்சம் பரிசுடன் 250 தரவரிசை புள்ளிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் நடைபெறுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்