உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இலக்கு!

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (15:22 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
பாகிஸ்தான் அணி தனது முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தாலும் அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சுதாரித்து ஆடியதால் ரன் விகிதம் அதிகரித்தது
 
குறிப்பாக மசூத் மற்றும் அகமது ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர் 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159  ரன்கள் எடுத்துள்ளது இதனையடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் 160 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்