கவிகோவுக்கு இரங்கல், கருணாநிதிக்கு மெளனம்: ரஜினியின் சாணக்கிய அரசியல்

ஞாயிறு, 4 ஜூன் 2017 (22:05 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கே வரவில்லை. அதற்குள் தனது சாணக்யத்தனத்தை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்



 
.

எந்த ஒரு முக்கிய நிகழ்வுக்கும் உடனுக்குடன் டுவிட்டரில் பதிவு செய்யும் வழக்கம் உடையவர் ரஜினி. சமீபத்தில் மறைந்த கவிக்கோ அப்துல்ரகுமான் மறைவு உள்பட தொடர்ச்சியாக டுவிட்டரில் பதிவு செய்து வந்த ரஜினி, தன்னுடைய நண்பர் கருணாநிதி என்று ஜெயலலிதா முன்பே கம்பீரமாக கூறிய ரஜினி, அவருடைய 94வது பிறந்த நாளுக்கு வாழ்த்துகூட தெரிவிக்காமல் மெளனம் காட்டியது பலவித ஊகங்களுக்கு காரணமாக உள்ளது.

ரஜினி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தால் அவருக்கு போட்டியாக இருப்பது திமுக மட்டுமே. அதிமுகவின் இரு அணிகள் உள்பட மற்ற கட்சிகள் அவருக்கு ஒரு போட்டியே இல்லை எனலாம். எனவே இப்பொழுது முதலே திமுகவுக்கு எதிரான நிலைப்பாடை ரஜினி எடுக்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்