குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் - அமைச்சர் விமர்சனம் !

வியாழன், 19 டிசம்பர் 2019 (17:34 IST)
அதிமுக கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களின் அறிமுகக் கூட்டம் இன்று, உசிலம்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தபட்ட பின்னரே அதில் உள்ள நன்மை தீமைகள் குறித்து தெரியவரும். இந்தக் குடியுரிமை சட்டம் குறித்து மக்களை திசை திருப்பி, குட்டையைக் குழப்பி  மீன் பிடிக்க ஸ்டாலின் நினைக்கிறார். அவரது கனவு பலிக்காது என தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்