தற்போது உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெறலாம் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை பாஜக ஆளும் மாநில அரசுகள் பாராட்டியும், காங்கிரஸ் முதலமைச்சர்கள் எதிர்த்தும் வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்.
ஆனால் அதிமுக ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சியில் இந்த நடவடிக்கையை வரவேற்கும் விதமாக செய்திகளை வெளியிட்டும் அதே நேரத்தில் இதனால் பொதுமக்கள் சந்திக்கும் அவதியையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதில் முதல்வர் ஜெயலலிதாவின் மவுனம் கலைந்து விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.