தொப்பியில் போட்டியிட்டு இரட்டை இலையை மீட்போம் - தங்கத்தமிழ் செல்வன்

வெள்ளி, 24 நவம்பர் 2017 (12:13 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.


 
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 7 மாதங்களுக்கு பிறகு நேற்று இரட்டை இலை சின்னம் எடப்பாடி தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே சசிகலா தரப்பினர் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டு ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் கூறியதாவது:-
 
வெற்றிச்சின்னமான தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி. துரோகிகளை மையமாக வைத்து தங்களின் பிரச்சாரம் அமையும். அதிமுக அம்மா அணி நாங்கதான். துணைப் பொதுச்செயலாளர் தினகரன்தான். போட்டியிட்டு ஜெயித்து, இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்