நடிகை விந்தியா புகார் எதிரொலி: திமுக பேச்சாளர் மீது வழக்குப் பதிவு..!

புதன், 19 ஜூலை 2023 (10:40 IST)
நடிகை விந்தியா திமுக பேச்சாளர்  குடியாத்தம் குமரன் என்பவர் தன்னை யூட்யூபில்  அவமரியாதையாக பேசியதாக புகார் அளித்துள்ள நிலையில் திமுக பேச்சாளர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் சமீபத்தில் யூடியூபில் விந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது.
 
இதனையடுத்து விந்தியா கொடுத்தா புகார் அடிப்படையில்  திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது மூன்று பிரிவுகளில் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் நடிகை விந்தியா குறித்து அவதூறு பரப்பும் வகையில் யூடியூபில் அவர் பேசியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்