பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்

திங்கள், 10 அக்டோபர் 2022 (10:44 IST)
பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்
பிரபல வில்லுப்பாட்டு விசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் காலமானார். அவரது மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
கடந்த 1928ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம் சிறுவயது முதலே வில்லுப்பாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார் 
 
கடந்த 40 ஆண்டுகளாக பல இடங்களில் வில்லுபட்டு கச்சேரியை நடத்திய அவர் வயது முதிர்வு காரணமாக காலமானார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவ அவரது மறைவிற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
சுப்பு ஆறுமுகம் பல திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பாக கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் நாகேஷ் உள்பட பல்வேறு நகைச்சுவை கலைஞர்களுக்கு அவர் நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்